பெண்களும் உலக அமைதியும்

டாக். பீட்டர் காஃன்

 

 

இல்லம்

பெண்கள்: சமத்துவமும் அமைதியும்

 

டாக். பீட்டர் காஃன்

 

இங்கு, பெண்களும் அமைதியும் எனும் தலைப்பில் இன்றிரவு நான் நிகழ்த்தவிருக்கும் சொற்பொழிவு குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இத்தலைப்பிலான ஒரு விஷயம் ஏன் இங்கு விவாதிக்கப்படுகிறது என்பது குறித்தும், பெண்களுக்கும் அமைதிக்கும் இடையில் என்ன தொடர்புள்ளது என்ப குறித்தும் நாம் ஆலோசிக்கவிருக்கின்றோம். இந்த இரண்டு விஷயங்களுக்கிடையிலான உறவவை, சமயத்தின் உலக மையத்தில் இருந்து கிடைத்துள்ள அசாதாரணமான மற்றும் குறிப்பிடத்தக்க எழுத்துக்களின் வாயிலாக காணலாம். உதாரணமாக, அப்துல் பஹா பின்வருமாறு எழுதி யுள்ளார்:

 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம் உணரப்படும்போது, யுத்தங்களுக்கான அஸ்திவாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். சமத்துவமின்றி இது சாத்தியப்படாது." மற்றும் சமீபத்தில், "உலக அமைதிக்கான வாக்குறுதி," எனும் தங்களின் சாசனத்தில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: பெண்களின் விடுதலை, அதாவது, இருபாலர்களுக்குமிடையிலான முழு சமத்துவம், அடையப்படுவதானது, மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத முன் தேவைகளில் ஒன்றாகும். இதிலிருந்து நான் புரிந்கொள்வது என்னவென்றால், உலகத்தில் இரு அடிப்படையான கேள்விகள் உள்ளன என்பதாகும். ஒன்று ஆண் பெண் சமத்துவம் அடையப்படுவது குறித்தது மற்றது, உலக அமைதி அடையப்படுவது குறித்தது.

 

அப்துல் பஹாவிடமிருந்தும், உலக நீதி மன்றத்திடமிருந்தும் கிடைத்துள்ள இவ்விரு வாக்குமூலங்களும், இவ்விரு விஷயங்களையும் இணைக்கின்றன. மற்றும், ஒரு விஷயம் மற்றதற்கான முன்தேவையும் ஆகும் என குறிப்பிடுகின்றன. ஆகையால், உலக அமைதி அடையப்படுவது குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை, முதலில் ஆண் பெண் சமத்துவத்தின்பால் கண்டிப்பாக செலுத்தப்பட வேண்டும் எனவே பொருள்படுகின்றது. இந்த விஷயம் பஹாய் போதனைகளின் சக்தி, செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் எவ்வாறு அடையப்படப்போகின்றது என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.

 

ஆக, இன்றிரவு நான் மூன்று தலையாய விஷயங்களைக் கருத்தில் கொள்ள விரும்புகிறேன்: முதலாவதாக ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வி, இரண்டாவதாக, அமைதி அடையப்படுவதற்கும் அதில் பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் எழக்கூடிய கேள்வி, மூன்றாவதாகவும் சுறுக்கமாகவும், இந்த சமத்துவம் அமுல் செய்யப்படுவதை பராமரிப்பதற்கு பஹாய் சமூகத்திற்கு கைவசம் உள்ள வாய்ப்புக்கள் குறித்த கேள்வி. இதை நாம் நிகழ் காலத்தில் அமைந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கப்போகின்றோம். இன்றைய உலகம், பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. ஒரு புறம், பழமை விரும்பிகள் சமயத்தின்பாலும், தத்துவங்களின்பாலும் கொண்டுள்ள வெறியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் ஆதிக்கமும் உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. மறுபுறம் பார்க்கையில், விரிவான ஆண்கள் எதிர்ப்பு வெறியை வெளிப்படுத்தும் பெண்கள் இயக்கங்கள் உள்ளன. இக்கேள்வியை, அமைதிக்கான சாசனத்தில் ஐக்கியம் அடையப்படுவதற்கான முயற்சியில் நமது பஹாய் சமூகத்தையே ஒரு முன்மாதிரியாக உலக நீதி மன்றம வழங்கியிருப்பதன் கண்ணோட்டத்தில் காண வேண்டும். உலக நீதி மன்றம், புலப்படாத நிலையிலிருந்து நாம் வெளிப்பட்டிருப்பதானது, மேலும் மேலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான கூரிய பார்வையும், நம்பிக்கையின்மையும், சந்தேகப்போக்கும் உடைய மக்கள் பஹாய் சமூகத்தை கூராய்வு செய்யப்போகின்றனர் எனக் கூறியுள்ளது. அவர்கள், நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளதற்கும், இன்னாளில் நமது நடத்தைக்கும் இடையில் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கும் வகையில் நமது வெற்றிகளையும் நடந்துகொள்ளும் முறைகளையும் கூராய்வு செய்வர். இவை யாவற்றையும் வைத்தே நாம் "ஆண் பெண் சமத்துவம்" குறித்த கேள்வி பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்காக உலக பஹாய் சமூகம் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யவேண்டும். காலங்காலகமாக பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஸ்தானம் மற்றும் அவர்கள் நடத்தப்பட்டு வந்துள்ள முறை குறித்தும் ஒரு சுருக்கமான வரலாறு ரீதியிலான ஆய்வு செய்வதன் மூலம் நான் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும், ஏன் பஹாய் போதனைகளை மட்டும் ஆய்வு செய்து அவற்றில் பெண்கள் சமத்துவம் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என மட்டும் பார்த்தால் போதாதா?, என ஒரு சிலர் வினவலாம். இதற்கு எனது மறுமொழி என்னவெனில், காலங்காலமாக பெண்கள் நடத்தப்பட்டு வந்துள்ள விதத்தை நாம் ஆராய்வது பயனுள்ள ஒன்றே என்பதாகும். ஏனெனில், பஹாய் போதனைகளை நன்கு கண்ணோட்டமிட்டும் அவற்றை மெச்சுவதற்கும் உரிய ஓர் ஒப்பீட்டை இது வழங்குகிறது. பஹாய் போதனைகளின் சிறப்புத்தன்மைகள் குறித்தும், அவற்றின் குறிப்பிடத்தக்கமை குறித்தம், மற்றும் அவற்றின் நீண்ட கால விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்திட இது உதவுகின்றது. பெரும்பாலும் மாற்று வகைகளில் இயங்கும் பஹாய் அல்லாத ஒரு சூழ்நிலையில் நமது கோட்பாடுகளை அமுல் செய்திட முனைவது குறித்த சவால்களை பஹாய்கள் எனும் முறையில் நாம் மேலும் நன்கு அறிந்துகொள்ள இது அதிகம் உதவுகின்றது.

 

ஆரம்பமாக, வரலாறு சார்ந்த ரீதியில் பெண்கள் எவ்வாறு அனுகப்பட்டுள்ளனர் என்பதை சரித்திர உணர்வோடு நான் கண்ணோட்டமிட விரும்புகின்றேன். இது, நிச்சயமாகவே வாதத்துக்கிடமான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் வரலாற்று காலம் முழுவதும பெண்கள் அநீதியாகவே நடத்தப்பட்டுள்ளனர் என வாதிடுவர். பிறர், இது பெரிதுபடுத்தப்பட்ட ஒரு விஷயம் எனவும், உண்மையில் பெண்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை எனவும் கூறுவர். ஆகவே, இது பல வேளைகளில் இணக்கம் காணப்பட முடியாத ஒரு விஷயமாகும். பல வேளைகளில், சமுதாய நிலையிலும், அல்லது பஹாய் சமூகத்திலும் கூட சரித்திரம் முழுவதும் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து வாதங்கள் எழுவதைப் பார்க்கலாம். ஆனால், இக்கேள்வி மிக எளிதில் தீர்க்கப்படக் கூடிய ஒன்றாகும். அதற்காக நாம் அப்துல் பஹாவின் அதிகாரபூர்வ எழுத்துக்கள்பால் திரும்பவேண்டும். அவ்வாறு திரும்பி, வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்பதன் மூலம் இப்பிரச்சனைக்கு நாம் தீர்வு காணலாம். இவ்விஷயம் குறித்து அப்துல் பஹா எழுதியுள்ளவற்றிலிருந்து இரு பத்திகளை நான் உங்களுக்காக படித்துக் காட்ட விரும்புகிறேன்.

 

அவர் முதலாவதாக கூறுவது: கடந்த காலங்களில் பெண்களும ஆண்களும் சமமானவர்கள் எனக் கருதப்படவில்லை. அதாவது, ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளே என்பதும், இது பெண்களின் உடல்கூறு மற்றும் படைப்பு ரீதியாகவும் கருதப்பட்டு வந்தது. பெண்கள் நுண்ணறிவில் மிகவும் தாழ்ந்தவர்கள் எனக்கருதப்பட்டது. இந்த எண்ணம் அனைத்துலக ரீதியானதாகவும், பெண்கள் மிகவும் முக்கியமான விஷயங்களில் பங்கெடுப்பதிலிருந்து தடுக்கவும் பட்டனர். ஒரு சில நாடுகளில், மனிதனுக்குத் தாழ்வான ஒரு படைப்பாக பெண்கள் கருதப்பட்டும் அவ்வாறு போதிக்கப்படும் அளவிற்கும் மனிதன் சென்றான். இவ்விஷயம் குறித்த அப்துல் பஹாவின் பல்வேறு எழுத்துக்களிலிருந்து மேலும் ஒன்று. அவர் கூறுவது: முற்காலத்தில், இந்தியா, பாரசீகம் மற்றும் கிழக்கு நாடுகள் முழுவதும், அவள், அதாவது பெண், ஒரு மனிதஜென்மமாகவே கருதப்படவில்லை. ஓரு சில அரபு இனங்கள், தங்கள் பெண்டிர்களை தாங்கள் வளர்க்கும் கால்நடைகளோடு சேர்த்தே கணக்கிட்டனர். அவர்களுடைய மொழியில் பெண்களுக்கான பெயர்ச்சொல் 'கழுதை' எனும் சொல்லின் அர்த்தத்தையும் கொண்டிருந்தது. அதாவது அச்சொல் கழுதை மற்றும் பெண் என இரு பொருள்பட இருந்தது. ஒரு மனிதனின் செல்வம் அவன் பெற்றிருந்த கால்நடைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டது. ஒரு மனிதனைப் பார்த்து ஒருவர் இகழ்ச்சியாக கூறக்கூடியவற்றில் "பெண்" எனும் வார்த்தையே அதி தாழ்வானதாகும். பண்டைய காலங்களில் பெண்கள் எழுதவோ படிக்கவோ தெரியாமல் இருப்பதே விவேகமாகும் எனக் கருதப்பட்டது. அவள் அடிமை வேலை புரிவதிலேயே தனது காலத்தை தள்ளவேண்டும்.

 

ஆகவே, தெளிவாகவும் ஒரு சில வார்த்தைகளிலும் காலங்காலமாக பெண்கள் பொதுவாகவே நடத்தப்பட்ட விதம் குறித்து அப்துல் பஹா கூறியுள்ளதை நாம் காண்கின்றோம். அப்துல் பஹா இதை ஏன் எழுத வேண்டும்? நான் படித்த இந்த கடுமையான வார்த்தைகளின் வாயிலாக அவர் என்ன கூற விழைகிறார்? சரித்திரக் குறிப்புகளைக் காண்கையில் பெண்கள் குறித்த பாகுபாடுகள் பல சரித்திர ரீதியான எண்ணங்களாக அல்லது உருவகங்களாக வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரனமாக, பெண் என்பவள் தான் ஒரு தாழ்வான பிறவி என்பதால் இயற்கை அன்னையோடு கூட்டுச் சேர்ந்து கொண்டவள், கருவளத்தின் மூலாதாரம் எனும் வகையில் மர்மமான, கட்டுப்படுத்த முடியாத சக்திகளைக் கொண்டவள், பெண் என்பவள் இயற்கை சக்திகளை பலியிடுபவள் என்பதெல்லாம் சரித்திரக் கருத்துக்கள். இக்கருத்துக்களை பண்டைய கால மேல்நிலை பெண் தெய்வங்களின் வாயிலாகவும், பழைய ஏற்பாட்டில் சாலமனின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட உவமைகளின் வாயிலாகவும் நாம் காணலாம். பெண் என்பவள், மர்மான ஒரு சக்தி படைத்தவள் எனவும். அவள் கட்டுப்பாடுகள் மூலமாகவும், புனிதப்படுத்தும் சடங்குகள் வாயிலாகவும் அடக்கப்பட வேண்டியவள் எனவும் கருதப்பட்டு வந்தது.

 

பெண் என்பவள் தாழ்வானவளாகவும், மாறுபட்ட ஒரு பிறவியாகவும், மாறும் குணம் கொண்டவளாகவும், உணர்ச்சிவசப்படுபவளாகவும், கல்வி பெறுவதற்கு ஆற்றலற்றவள் என்பதும் மற்றொரு கருத்தாககும்.

 

பெரும்பாலும் மரபுச்சமயங்களில் காணப்படும், பெண்கள் சமத்துவமற்ற வகையில் நடத்தப்படும் மற்றொரு முறையாக, அவள் கற்புநெறியின் முன்மாதிரியெனவும், பக்தை எனவும், கன்னித் தன்மையுடையவள் எனவும், கீழ்ப்படிபவள் எனவும், சாது எனவும், ஆணுக்கு அடிபனிபவள் எனவும், வீட்டுப் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவள் எனவும், சட்டரீதியிலோ அரசியல் ரீதியிலோ அதிகாரம் இல்லாதவள் எனவும், பகுத்தறிவு சார்ந்த எந்த விஷயமாயினும், அதை தனது கனவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ, சுருக்கமாக ஓர் ஆணிடமே கொண்டுசெல்ல வேண்டியவள் எனக் கருதப்படுவதே உள்ளது. இந்தக் கருத்து, அதிகமான வரலாற்றுக் குறிப்புகளில் அடங்கியும், ஒரு சில சட்டமுறைகளிலும் இணைக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரான்ஸ் நாட்டில் நெப்போலியனின் சமூக சட்டமுறை, உரிமைகள் இல்லாதவர்களென, சிறார்களையும், திருமணமான பெண்களையும், குற்றவாளிகளையும், மற்றும் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களையும் குறிப்பிடுகின்றது. நெப்போலியனின் 904 சட்டக் குறிப்பின்படி பெண்களுக்கு உரிமைகள் ஏதும் கிடையாது. ஷொப்பன்ஹோவர் என்பவர், பெண்கள் தங்கள் இயல்பினால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் எனவும், அவர்களுக்கு பாதுகாப்பவர் ஒருவர் அவசியமெனவும், அவர்கள் கீழ்படிதலுக்கென படைக்கப்பட்டவர்கள் எனவும் கூறியுள்ளார். ஆகவே, இந்தப் பல்வேறு மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களின் வாயிலாக பெண்கள்பாலான சமத்துவமற்ற போக்கு வெளிப்படுத்தப்பட்டது.

 

இந்த நிலை குறித்து சமயம் என்ன செய்துள்ளது? மீண்டும், இவ்விஷயம் வாதத்திற்குட்படுவதையே காண்கின்றோம். பெண்களை நடத்தும் விதம் குறித்து சமயங்களின் பங்கைக் கண்ணுறுகையில், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கின்றன. மீண்டும் நாம் நமது சமயத்தின் புனிதமும் அதிகாரமும் நிறைந்த எழுத்துக்களின் பக்கமே வழிகாட்டலுக்காக திரும்பவேண்டியுள்ளது. இந்தப் பஹாய் எழுத்துக்களை நாம் ஆராய்கையில், சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை புரிந்துகொள்ள எனக்கு உதவும் வகையில் மூன்று கோட்பாடுகள் இருப்பதைக் காண்கின்றேன்.

 

முதல் கோட்பாடு பஹாவுல்லாவின் ஒரு கூற்றில் காணப்படுகின்றது. அவர்: "கடவுளின் பார்வையில் பெண்களும் ஆண்களும் என்றும், இனி என்றென்றும், சமமானவர்களே. ஆகவே, இது முதல் கோட்பாடு, அதாவது - கடவுளின் பார்வையில் சமத்துவம்.

 

இரண்டாவது கோட்பாடு, பெண்கள் பெரும் நெறிமுறை சார்ந்த மன உறுதியுடையவர்கள் என்பது குறித்தது. அப்துல் பஹா கூறுவது: "ஓர் ஆணைவிட ஒரு பெண்ணுக்கு அதிகமான நெறிமுறை சார்ந்த மன உறுதி உள்ளது. அபாயங்கள் மற்றும் நெருக்கடி மிக்க நேரங்களில் காரியநிர்வாகம் செய்திட ஆற்றலளிக்கும் விசேஷ கொடைகளும் அவள் பெற்றுள்ளாள்.

 

மூன்றாவது கோட்பாடு, வரலாற்று ரீதியில், சமயங்கள் ஆண்களை பெண்களுக்கும் மேம்பட்டவராகவே சித்தரித்துள்ளன. அப்துல் பஹா கூறுவது: அவர், அதாவது பஹாவுல்லா, ஆண் பெண் சமத்துவத்தை ஸ்தாபித்துள்ளார். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு இது விசேஷமாகும். ஏனெனில் மற்ற எல்லா சமயங்களும் பெண்களை ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவே சித்தரித்துள்ளன.

 

இறைவனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம், பெண்களுக்கு அதிகமான நெறிமுறை சார்ந்த மன உறுதியுண்டு, மற்றும் எல்லா சமயங்களும் பெண்களை ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே சித்திரித்துள்ளன, எனும் மூன்று கோட்பாடுகள்.

 

இம்மூன்று கோட்பாடுகளும், சமயங்கள் பெண்களை இதுகாறும் பாவித்துள்ள விதம் குறித்த ஆய்வை ஒளிபெறச் செய்யும் அஸ்திவாரங்கள் என்பது என் கருத்தாகும். உதாரனமாக, கடவுளின் பார்வையில் சமத்துவம் எனும் கேள்வி தொட்டு, திருக்குரானிலும், புதிய ஏற்பாட்டு நூலின் காலேஷியன்ஸ் அத்தியாயத்திலும், மற்ற புனித நூல்களிலும் அற்புதமான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இக்குறிப்புகள், இறைவனின் அவதாரங்களின் வார்த்தைகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வார்த்தைகள் தற்போதும் அவற்றின் அதிகாரபூர்வ நிலையில் வழக்கில் உள்ளன.

 

இவ்விரண்டாவது கோட்பாடு நெறிமுறை குறித்த மனோ தைரியமாகும். ஆணைவிட பெண்ணுக்கே அதிக நெறிமுறை சார்ந்த மன உறுதி உள்ளதென அப்துல் பஹா கூறுகின்றார். சமய சரித்திரத்தை நாம் பார்க்கையில், ஒவ்வொரு சமயத்தின் ஆரம்ப காலங்களிலும் பெண்கள் தங்கள் பங்கிற்கும் அதிகமான நிலையிலேயே செயல்பட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் அச்சமயங்களுக்கு உறுதியையும், நம்பிக்கையையும் நிர்வாகத் திறனையும் அளித்துள்ளனர். உதாரனமாக, கிருஸ்தவ சமயத்திற்கு மகதல மேரி ஆற்றிய சேவையை, முகம்மதுவின் சமயப்பணிக்காலத்தின் ஆரம்பத்தில் அவருக்கு உருதுணையாக காத்திஜா அவர்கள் ஆற்றிய பங்கை, முகம்மது அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டபோது பாத்திமா அவர்கள் காட்டிய மன உறுதியையும், அவர் முகம்மது அவர்களுக்கு காட்டிய ஆதரவையும் பாருங்கள். அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரின் காலங்களில் பாஹிய்யா காஃனும், தாஹிரி, நவ்வாப், ஆகயோரைப் பாருங்கள். அப்துல் பஹாவின் காலத்திலும், பாதுகாவலரின் காலத்திலும், அவர்களுக்கு பாஹிய்யா காஃனும் அளித்த உறுதியான ஆதரவையும், பாதுகாப்பகத்தின்(Guardianship) ஆரம்பகாலங்களில் அவர் அளித்த நிர்வாகத் திறனையும் பாருங்கள். இவற்றிலும் மற்றும் சமய வரலாற்றின் பிற உதாரனங்களின் வாயிலாகவும், அப்துல் பஹா குறிப்பிடும் நெறிமுறை சார்ந்த மன உறுதியைக் காணலாம்.

 

இப்போது சமயங்கள் பெண்களைவிட ஆண்களே மேம்பட்டவர்கள் எனச் சித்தரிப்பதாகத் தோன்றும் மூன்றாவது கோட்பாட்டைக் காண்போம். இங்கு, சமூக கோட்பாடுகளுக்கும் ஆன்மீக நெறிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். எல்லா மதங்களையும் காண்கையில், ஆன்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எப்போதுமே சமூக ரீதியில் ஒரு வேறுபாடு என்றென்றும் இருந்து வந்துள்ளது. இந்த வேறுபாடு அந்தந்த காலங்களின் சமூக சூழ்நிலைகள் அல்லது சுற்றுச்சூழலை பொறுத்தும் இருந்துள்ளது. ஆண்கள் பெண்களுக்கும் அவர்களைப் போன்றோர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர்களாக இருந்துள்ளனர். இருந்தபோதிலும், இங்கு முக்கிய பிரச்சினையானது பல்வேறு மதங்களின் போதனைகளில் உள்ள சமூக கோட்பாடுகள் அல்ல; ஆனால், பெண்களுடனான ஆண்களின் உறவில் உள்ள ஆன்மீக மதிப்புணர்வே பிரச்சனையாக உள்ளது. இங்கும் வரலாற்றைக் காண்போமானால் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ஆன்களின் வசப்பட்ட சமயங்களில் ஆண் சமயகுருக்கள் மற்றும் இறைமையியலின் எழுச்சியின் போதெல்லாம் இத்தகைய சூழ்நிலைகள் உருவாகின்றதை வரலாற்றில் காணமுடிகிறது. என்னைப் பொறுத்த வரையில் சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு இந்த சூழ்நிலையே முக்கிய நிலையில் உள்ளது.

 

காலப்போக்கினாலும், சமயகுருக்களின் எழுச்சியினாலும், இறைமையியலின் மேம்பாட்டினாலும், சமயங்கள் பெண்களை விட ஆண்களுக்கே அதிக மதிப்பளிக்க முற்பட்டன. உதாரனமாக, தால்முட்டில்(யூத மதம்) பின்வரும் வாக்கியத்தைக் காணலாம்: என்னை ஒரு புறவினத்தவனாக, முட்டாளாக, அல்லது ஒரு பெண்ணாக படைக்காத இறைவா, நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

 

தால்முட்டிலும்.. புதிய ஏற்பாட்டின் கோரிந்தியனிலும், மாதாகோவில்களில் பெண்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது முக்கியமல்ல, ஏனெனில் சட்டமே பின்வருமாறு கூறுகின்றது: அவர்கள்(பெண்கள்) ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் அவர்கள் இல்லத்தில் தங்கள் கணவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். ஒரு பெண் மாதா கோவிலில் வாய்திறந்து பேசுவது வெட்கக்கேடானது. கிருஸ்தவ இறைமையியல்வாதிகள் பெண்களை மட்டப்படுத்தினர். கி.பி. 2வது நூற்றாண்டில், டிட்டிலியன், இயேசு சிலுவையில் அரையப்பட்டதற்கு பெண்களையே குறை சொன்னான். ஏனெனில் பெண்கள் தங்கள் பூர்வீகத்தை ஏவாளிடமிருந்தே பெற்றுள்ளனர்; ஏவால் வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள்களுக்கு அப்பால் ஆதாமை ஈர்த்தாள்; இது பூர்வபாவத்தை உருவாக்கியது, பூர்வபாவத்தின் பயனாக இயேசு சிலுவையில் அரையப்பட்டும் மூன்று நாட்கள் கீழே நரகத்திற்குச் செல்லவும் வேண்டியதாயிற்று. ஆக, அவன் இயேசு சிலுவையில் அரையப்பட்டதற்கு பெண்குலத்தையே குற்றம் சாற்றினான். டிட்டிலியனின் எழுத்துக்களில் ஒரு பகுதி பெண்களுக்குக் கூறுவது யாதெனில்: இறைவன் உங்கள் இனத்திற்கு அளித்த தண்டனை இக்காலத்திலும் செயல்படுகின்றது, அதன் பயனாக விளையும் குற்றவுணர்வும் செயல்படவே செய்யும். நீங்கள் சாத்தானுக்கான வாயில்கள். சாத்தானே எதிர்ப்பதற்குத் துணியாத அவனை நீங்கள்தாம் வற்புறுத்தினீர்கள் என மேலும் மேலும் கூறிக்கொண்டே போகலாம். கி.மு. 585ல் கிருஸ்தவக்கோவில் ஒன்றின் வழிகாட்டி கூறுவது: பெண்களுக்கு ஆன்மாவென ஒன்று இருந்தால், அது ஆண்களின் ஆன்மாவுக்கும் கீழான நிலையில் உள்ள ஒன்றாகவே இருக்கவேண்டும், அதாவது மிருகங்களுக்கு உள்ளதுபோல.

 

தனது பூர்வபோதனைகளிலிருந்து வேறுபட்டும், மதகுருக்களின் அமைப்புமுறையும், இறைமையியலும் எழுச்சிகண்டுள்ள இஸ்லாத்தின் வரலாறு, கிருஸ்தவ வரலாற்றுக்கும் மேம்பட்டதல்ல. பொதுவாக, தற்கால இஸ்லாமிய இறைமையியல்வாதிகள், பெண்கள் குறித்த தங்களது பிரத்தியேக கண்ணோட்டம் ஒன்றை எழுதிவைத்துள்ளனர். இக்காண்ணோட்டம், மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது. ஒன்று, ஆண்களோடு ஒப்பிடுகையில், உயிரியல் ரீதியில், உதாரனமாக பெண்களின் மாதவிடாய், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவமற்ற நிலைய உருவாக்கியுள்ளது. இரண்டாவதாக, ஆண்களின் பாலுணர்வு கட்டுப்படுத்தப்பட முடியாததால், தினசரி வாழ்க்கையில் பெண்கள் கண்காணாமலேயே வாழவேண்டும். மூன்றாவதாக, இல்லங்களில் ஆண்களுக்கே அதிகாரம் உள்ளது.

 

இஸ்லாமிய பழமைவிரும்பிகளின் எழுச்சியின் பயனாக, இக்காலத்து இஸ்லாமிய சட்டங்கள் பெண்கள்பால் மேலும் மேலும் அதிகமான ஒரவஞ்சனையுனர்வை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவது, முகத்திரை அனிவது, கல்வி பெறுவதில் கட்டுப்படுத்தப்படுவது ஆகியவை மட்டுமின்றி, சட்ட அமைப்புமுறை ரீதியிலும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். உதாரனமாக, இன்றைய இஸ்லாமிய நாடு ஒன்றில், பெண் ஒருத்தி ஓர் ஆணின் மீது கற்பழிப்பு புகார் ஒன்றை செய்தும், அவளால் அதை நிரூபிக்க முடியாமலும் போனால், சோரம் போன குற்றத்திற்காக அவளே பிறகு குற்றஞ்சாற்றப்படுகின்றாள். வேறொரு இஸ்லாமிய நாட்டில் குருடியான பதின்மவயது கற்பினி பெண் ஒருத்திக்கு 15 பிரம்படியும், மூன்று வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஏனெனில் தன்னைக் கற்பழித்தவர்களை அவளால் அடையாளம் காட்ட முடியவில்லை; காரணம், அவள் குருடி! பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் இந்தப் பாரம்பரிய கருத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது போன்றவை, குறிப்பிட்ட அளவிற்கு இன்று எழுச்சி கண்டுள்ளன. இது கிருஸ்தவ சமயம், இஸ்லாம், இந்து, மற்றும் பிற சமயங்களில் பழமைவிரும்பகளின் எழுச்சியின் பயனாக தோன்றியுள்ளது.

 

இக்காலத்தில் நடப்பவற்றை இப்போது காண்போம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இருவிதமான கண்ணோட்டம் ஒன்றைக் காணலாம். ஒரு புறம், சமத்துவத்தை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மறுபுறமோ, இன்னமும் குறைபாடுகள் இருக்கின்றன. அவை, பஹாய் சமூகமும் அதன் போதனைகளும் இதில் ஒரு முக்கிய பங்காற்றுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. கல்வி, பெண்கள் கல்லூரிகள், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பல்கலைகழகங்களில் இருபாலர்கல்வி, ஆகியவை சமத்துவத்தை நோக்கி ஒரு பெரும் உந்துசக்தியளித்துள்ளன.

 

1892ல் பஹாவுல்லா இயற்கை எய்திய காலகட்டத்தில், ஆண்களுக்குச் சமமான வாக்குரிமையை பெண்களுக்கு எந்த நாடுமே வழங்கிடவில்லை. அவர் இயற்கை எய்தியபோது எந்த நாடுமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை. அதன் பிறகு, 1893ல் நியூ சீலாந்தும், 1902ல் ஆஸ்திரேலியாவும், பிறகு வாக்களிப்பதை அனுமதிக்கும் மற்ற எல்லா நாடுகளும் சிறுக சிறுக பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குரிமை அளித்துள்ளன.

 

1848ல், ஐக்கிய அமெரிக்காவில், வாக்களிக்கும் புனித உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனும் பிரகடனத்தை பெண்கள் உரிமைப் பேராளர் மாநாடு ஒன்று வெளிப்படுத்தியது. ஆனால், இப்பிரகடனம் நடப்பிற்கு வருவதற்கு 80 ஆன்டுகளுக்கும் மேல் ஆகியது.

 

தொழில்துறையைப் பொறுத்த வரையில் பெண்களுக்கான வாய்ப்புக்களில் பெரும் அடிகள் எடுத்துவைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகவே உள்ளது. இது பெண்களுக்காக திறந்துவிடப்பட்ட வேளை வாய்ப்புக்களை மட்டுமே சார்ந்துள்ளது. இருந்தபோதும், மருத்துவம், சட்டத்துறை மற்றும் பௌதீக விஞ்ஞானத்துறை ஆகிய பாரம்பரிய துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது கடினமாகவே உள்ளது.

 

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களின் விடுதலையில் நாம் பெற்றுள்ள வெற்றிகளைக் கண்டு நாம் திருப்தி அடைந்துவிடலாகாது. மாறாக, இப்போதும் நடப்பில் உள்ள ஒரு சில குறைபாடுகள் யாவை என நாம் சிந்திக்கவேண்டும். உதாரனமாக, 1980ல் ஐக்கிய நாட்டின் கணிப்பு ஒன்றில், உலக ஜனத்தொகையில் சரிபாதியான பெண்கள், அதில் மூன்றில் இரண்டு பங்கு வேளைகளை தாங்களே செய்கின்றனர், அதன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் பெருகின்றனர், அதன் செல்வங்களில் நூற்றில் ஒரு பங்கே அவர்களுக்குச் சொந்தம், மற்றும் உலகில் வாழும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் பெண்கள் மூன்றில் இரண்டு பங்கினர் ஆவர். ஆகவே, வெளிப்படையாகவே பெரும் குறைபாடுகள் உள்ளன. இந்தியாவிலும் சீனாவிலும் பெண் சிசுஹத்தி இன்றும் நடைபெறுகின்றது. உலகின் பல பாகங்களில் பெண்களின் பாலியல் உருப்புக்களை உருக்குலைக்கும் பழக்கம் இன்னமும் தொடருகிறது. சீதனம் குறைவாகக் கொண்டு வரும் பெண்களை எரிக்கும் செயல் இந்தியாவில் காணக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. சமய பழமைவிரும்பிகளின் ஏற்றம் ஆகியன என மேலும் பலவற்றைக் கூறலாம்.

 

1984ல் நியு யார்க்கில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகம் எழுபது தேசிய ஆன்மீக சபைகளைக் கொண்டு ஒரு புள்ளிவிவர கணிப்பு செய்தது. அதில், அவற்றின் நாடுகளில் வாழும் பெண்களின் நிலைமை குறித்து விவரங்கள் கேட்கப்பட்டன. இதன் தொடர்பில் அந்த சபைகளிடமிருந்து கிடைக்கப்பட்ட விவரத்தின்படி இவ்வித பாரம்பரிய சமத்துவமில்லாமை ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் இருந்தது. அவையாவன, தீர்மானங்கள் செய்வதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு, பிரயாணம் செய்வதில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லாமை, பெண்ணைவிட மேலானவன் எனும் எண்ணம், கலந்துரையாடல்களில் பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்பில்லாமை ஆகியவை. வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வேளை உயர்வு பெறுவதில் இன்னமும் பெரும்படியான முட்டுக்கட்டைகள் உண்டு. பெரும்பாலான நிறுவனங்களில் பெண்கள் ஊதியம் குறைவாகவும், செல்வாக்கு இல்லாத பதவிகளிலுமே அமர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள நிலைக்குலைந்து வரும் சமூகங்களில் உயர்ந்து வரும் சீர்கேடுகளினால் பென்களின் நிலை மேலும் அபாயத்திற்குள்ளாகியுள்ளது. ஆபாசப்படங்களின் அதிகரிப்பு, கிரிமினல்களாலும், மனங்கெட்டவர்களாலும் பெண்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்படுவது, கற்பழிப்பு சம்பங்களின் அதிகரிப்பு, வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால் பெண்கள் விபச்சாரங்களில் ஈடுபடுவது, வேலை பற்றாக்குறைக்கு பெண்களைக் காரணமாக்குவது, திருமணங்கள் சீர்குலைவதற்கு பெண்களே காரணமென்பது, குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெண்களே காரணமென்பது ஆகியவற்றைக் கூறலாம். இக்காலத்திலும் பெண்களை நடத்தும் முறையில் நடப்பில் உள்ள பெரும் குறைபாடுகளின் உதாரனங்களே இவை யாவும்.

 

பஹாய் போதனைகளின்பால் திரும்பும் முன், சரித்திர ரீதியில் குடும்பத்தில் பெண்களின் பங்கு குறித்து மேலோட்டமாகப் பார்ப்போம். குடும்பத்தில் ஆணே தலைவன் என பெரும்பாலான சமூகங்களால் உருவரையப்பட்டுள்ளது. இந்த உருவரை பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது: மனைவி கனவனுக்கு கீழ்படிபவள், ஆணே தீர்மானங்கள் செய்வதில் ஆதிக்கம் செலுத்துபவன், பெண் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்துகிடப்பவள். உதாரனமாக, விவிலிய நூலின் எபீஃசியன்ஸ் பகுதியில் பின்வருவதைப் போன்று காணலாம்: இயேசு, புனிதசபைக்குத் தலைவராக விளங்குவது போன்று கனவன் மனைவிக்குத் தலைவனாக இருப்பதால் மனைவிகள் இறைவனைப்போன்று கனவனுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும். சபை இயேசுவுக்குக் கீழ்பட்டிருப்பது போல், யாவற்றிலும் மனைவிகள் தங்கள் கனவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.

 

உலகிலுள்ள மற்ற சமூகங்களிலும் இது போன்ற பழக்க வழக்கங்களைக் காணலாம். இல்லங்களில் காணப்படும் ஆண் ஆதிக்கத்திற்கெதிரான பெண்களின் மறுமொழி இரு வகையாக உள்ளது: ஒன்று, கீழ்படிந்து போதல், பார்க்கப்போனால் அதற்கு ஒத்துப்போவது போலும் இருக்கும். அதாவது, தான் ஒரு பேதையைப் போன்ற நிலையை உருவாக்குவது. இதை நாம் அடிக்கடி ஆங்காங்கு படித்துத் தெரிந்துகொள்ளவும் கூடும். மற்ற வகையானது, கடும் எதிர்ப்பினால் அடக்கப்பட்ட கொந்தளிப்பை உட்படுத்தியதாகும். இது, தன் குழந்தைகளிடமே தன் கனவனைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, புறம்பேசுவது மற்றும் அதைப்போன்ற செயல்களில் ஈடுபடுவது - இவை யாவுமே ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான பின்விளைவான மறுமொழிகளே.

 

மனித சமுதாயத்தின் ஒரு சோகமான அம்சம் என்னவெனில், இல்லங்களில் ஆண் ஆதிக்கத்தை பலாத்காரமான முறையில் சுமத்தியதே ஆகும். மனவிகளை உடல்வதை செய்ததே இதன் உச்சகட்டமாக விளங்கியது. பண்டைய காலங்களிலும் சரி, இப்போதும் சரி, இச்செயலினால் பெரும்பாலான சமுதாயங்கள் இழிவடைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.19ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பொதுச் சட்டமாகப்பட்டது கனவன்மார்களுக்குப் பின்வரும் சலுகையை வழங்கியது, "தன் மனைவியை இணக்கமான எந்த தடி கொண்டும் கண்டிக்கலாம்," என அதிகாரம் வழங்கியது. பிறகு, வழக்கு மன்றங்கள் இணக்கமான தடி என்பது என்ன என்பது குறித்து விளக்கமளிக்க கோரப்பட்டன. அவை, இணக்கமான தடி என்பது ஒரு மனிதனின் கட்டை விரலின் அளவுக்கு மிஞ்சாத கோல்கள் என விளக்கமளித்தன. அதாவது, ஒரு மனிதனின் கட்டை விரலுக்கு மேற்போகாத அளவு கொண்ட ஒரு கோலோ, தடியோ, கட்டையோ கொண்டு ஒரு மனிதன் தன் மனைவியைக் கண்டிக்கலாம்.

 

1871ல், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வழக்கு மன்றங்கள், ஒரு பழமையான அதிகாரம் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு காலம் கனிந்துவிட்டதென முடிவெடுத்தன. அது, ஒரு மனிதன் தன் மனைவியை தடி கொண்டு அடிப்பதற்கும், அவளுடைய முடியைப் பிடித்து இழுப்பதற்கும், அவள் குரல்வளையை நெறிப்பதற்கும், அவள் முகத்தில் உமிழ்வதற்கும், அல்லது அவளைத் தரையில் தள்ளி காலால் எட்டி உதைப்பதற்கும் அல்லது அது போன்ற வேறு அவமானங்களைப் புரிவதற்குமான கனவனுடைய அதிகாரமாகும். இவை 1871ல் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வழக்கு மன்றத்தின் தீர்ப்புகளிலிருந்து மேற்கோளிடப்பட்டவையாகும். அவை, "இவ்விதமான பழக்கங்களை மீட்டுக்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டது," என குறிப்பிட்டன.

 

இக்காலத்திலும் கூட மனைவியைத் துன்புறுத்துவது நடக்காத ஒன்றல்ல, என்பதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். நியு யார்கில் நடை பெற்ற ஒரு வழக்கு குறித்து நான் படித்தேன். அதில், மனைவி ஒருத்தி தன் கனவனைக் கொலை செய்ததாக கொலைக் குற்றம் சாற்றப்பட்டிருந்தாள். வழக்கின் போது, கனவன் அவளை படிகளிலிருந்து உதைத்துக் கீழே தள்ளியதாகவும், காரின் பின்புறத்தில் வைத்து அவளைப் பூட்டியதாகவும், கொதிக்கும் ஷவரின் கீழ் அவளை பிடித்துகொண்டிருந்ததாகவும், மற்றும் அவளை சிகரெட்டினால் சுட்டதாகவும் தெரியவந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அந்த கொடுமைகளின் முடிவில் அந்தப் பெண் தன் கனவனைக் கொலை செய்தாள். இப்போது அவள் 15 வருட ஆயுள் சிறை அனுபவித்து வருகின்றாள். ஆகவே, மனைவியைக் கொடுமைப் படுத்துவதென்பது, பண்டைய காலத்திலும் சரி, இப்போதும் சரி, நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும். மனைவிமார்கள் வதை குறித்த ஒரு சமூக ரீதியான கருத்துக்கணிப்பு பின்வரும் முடிவிற்கு வந்தது. அதாவது, "மனைவிகள் வதைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு முழுமையான இருபாலர் சமத்துவம் அவசியம்," என்பது.

 

சரி, இப்போது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுற்றதால், இந்த மிக முக்கியமானதும் சிக்கலானதுமான விஷயம் குறித்து பஹாய் போதனைகள் என்ன கூறுகின்றனவென பார்ப்போம். பஹாய் போதனைகளில் பெண்களின் நிலை, சட்டரீதியானது மட்டுமல்ல, ஆனால், ஆன்மீகமானதும் கல்விரீதியானதும் கூட, என பாதுகாப்பாளர் ஷோகி எபெஃன்டி கூறுகின்றார். இப்போதனைககளை பல வகைகளாக ஆராயலாம். முதலாவதாக, சமத்துவமெனும் மிக அடிப்படையான கோட்பாட்டைப் பார்க்கலாம். நான் அது குறித்து பல புனிதவாசகப் பத்திகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் காட்ட விரும்புகிறேன். அவற்றில் பெரும்பான்மையானவற்றை சமீபத்தில், பஹாய் உலக மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவினால் தயாரிக்கப்பட்டும், உலக நீதி மன்றத்தால் வெளியிடப்பட்டதுமான, பெண்கள் குறித்த வாசகத் திரட்டில் காணலாம்.

 

முதலாவதாக சமத்துவம் குறித்த கோட்பாட்டைப் பார்ப்போம். இது குறித்து பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள பல குறிப்புகள் உள்ளன: "இந்த நாளில் தெய்வீக அருளெனும் கரம் எல்லாவிதமான வேறுபாடுகளையும் அகற்றியுள்ளது. கடவுளின் சேவகர்களும், அவரது பணிப்பெண்களும், ஒரே நிலையிலானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்." ஆண்களையும் பெண்களையும் குறித்து அப்துல் பஹா கூறுவது: "ஓர் ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்திலிருந்து அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் கிடையாது." ஆகவே, நமது சமயத்தின் எழுத்துக்கள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளன - ஓர் ஆன்மீக ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வேறுபாடுகள் கிடையாது. வேறொரு இடத்தில், மனுக்குலத்தைப் பற்றி குறிப்பிடுகையில், அதற்கு இரு பாகங்கள் உண்டென கூறுகின்றார். அவை இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவையெனவும் கூறுகின்றார். ஆன்மீக ரீதியில் இரண்டிற்கும் வேறுபாடுகள் கிடையாது, நடைமுறை ரீதியில் இரண்டும் ஒன்றையொன்று நிறைவு செய்பவையாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கு மேல் ஒருவரை உயர்த்திக் கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தும் வாசகங்கள் உண்டு. அவை, சட்டங்கள் ஆணையும் பெண்ணையும் சமமாகவே உட்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றன.

 

இரண்டாவதாக, திருமணம் மற்றும் குடும்பங்கள் குறித்த பஹாய் போதனைகள். இங்கு, காலங்கள் தோறும், பார்க்கப்போனால் ஆயிரமாயிரம் வருடங்களாக, உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயங்களினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளவற்றுக்கும் பஹாய் போதனைகளுக்கும் இடையிலான முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதுமான வேறுபாட்டை நாம் காணுகின்றோம். அது, நமது சமயத்தில் தம்பதிகளுக்கிடையிலும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இடையிலான உறவாகப்பட்டது, சமத்துவம், கலந்தாலோசனை, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமலும் இருப்பது ஆகியவற்றின் அஸ்திவாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாசகங்களைப் படிப்பதற்கு என்னை அனுமதிக்குமாறு வேண்டுகின்றேன். ஒரு பஹாய் குடும்பத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை, ஒரு முழு சமூகத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையைப் போன்று சமயத்தின் முக்கிய எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும். இந்த எண்ணம், ஆதிக்க அதிகாரம் அல்ல, ஆனால், பனிவான தோழமை; தன்னிச்சையான அதிகாரமல்ல, ஆனால், வெளிப்படையானதும் அன்பு சூழ்ந்ததுமான ஒரு கலந்துரையாடலாகும், என பாதுகாவலர் குறிப்பிடுகின்றார். வேறொரு இடத்தில், கனவன் மனைவிக்கிடையே நிகழக்கூடிய முடிவெடுக்கும் செயல் பற்றி குறிப்பிடுகின்றது. அது கூறுவது: சமநிலை மற்றும் மிதப்போக்கு குறித்த விழிப்புணர்வால் ஊக்கமளிக்கப்பட்ட, முழுமையானதும் வெளிப்படையானதுமான குடும்பக் கலந்துரையாடல் குடும்ப தகறாறுகளுக்கு பூரனநிவாரனமாக இருக்கக்கூடும். கனவர்கள் மனைவிகளையோ அல்லது மனைவிகள் கனவர்களையோ ஆதிக்கம் செலுத்த நினைக்கக்கூடாது. இதற்கும், காலங்காலமாக, திருமனங்களின் ஓர் அம்சமாக, ஆண்களே எல்லா தீர்மானங்களையும் எடுப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கவனிக்கவும்.கலந்தாலோசனையின் இந்த அம்சம் குறித்து, பஹாய்களாகிய நாம், பெரிய அளவில் பெரும்பான்மையான கருத்தே தீர்மானமாகக் கொள்ளப்படும் பஹாய் கலந்துரையாடலோடு, நாம் பழக்கப்பட்டிருக்கின்றோம். கனவனும் மனைவியும் கொண்ட குடும்பமும், அங்கு கலந்துரையாடலும் நிகழும் ஒரு சூழ்நிலையில் என்ன நடக்கின்றது, தீர்மானங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன? உலக நீதி மன்றம் கூறியது: சில நேரங்களில் கனவன் மனைவியிடமும் மனைவி கனவனிடமும் விட்டுக்கொடுத்துப்போவது அவசியம். ஆனால், இதில் ஒருவர் மற்றவரை நியாயமற்ற முறையில் ஆதிக்கம் செய்ய நினைக்கக்கூடாது. வேறொரு இடத்தில் உலக நீதி மன்றம் இதே விஷயம் குறித்து விளக்கம் அளிக்கின்றது: இவ்வித விட்டுக்கொடுத்தல் எவ்வாறான சூழ்நிலையில் நடைபெறவேண்டும் என்பது அந்தந்த தம்பதியினரின் முடிவைப் பொறுத்துள்ளது.

 

குறைந்தது ஒரு முறையாவது, குடும்பத்தில் நிகழும் தகறாறுகள் மற்றும் மனைவியை அடிப்பது பற்றி உலக நீதி மன்றம் எழுதவேண்டியது அவசியமெனக் கண்டுள்ளது. இந்த விஷயம் குறித்து உலக நீதி மன்றம் வெளியிட்ட சாசனத்தை நான் படித்துக்காட்ட விரும்புகின்றேன்: குடும்பத்தில் அடிதடிசெயல்கள் சமயத்தின் உணர்விற்கு எதிர்மாறானதாகும். அது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். சமுதாயத்தின் பரந்த கட்டமைப்புமுறை முழுமைகெடாமல் இருக்க வேண்டுமானால், குடும்பங்களில் காராசாரமான தகறாறுகளை ஒடுக்குவதற்கு மருத்துவ முறை உட்பட உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இது குறிப்பாக, மிகவும் மட்டுமீறிய மனைவியை அடிப்பது மற்றும் சிறார்வதை போன்ற பிரச்சினைகளை உட்படுத்தியதாகும்.

 

பஹாவுல்லா அவர்களே, ஒரு வாசகப்பகுதியில், ஆண்களால் பெண்கள் வதைபடுவதை தவிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார். அவர் கூறுவது: நீதி, நியாயம், அன்பு மற்றும் கருனை ஆகியவற்றால் இறைவனின் நண்பர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் எவ்வாறு சித்திரவதைக்கும் அத்துமீரல்களுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ள அனுமதிப்பதில்லையோ, அவர்கள் அவ்வாறே, கொடுமைகள் பணிப்பெண்களை அனுகுவதையும் அனுமதிக்கக்கூடாது.

 

எவ்வாறு ஆண் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டும் அடிப்படையான பொறுப்பைக் கொண்டுள்ளானோ, அதே போன்று பெண்ணும் தான் குழந்தையின் முதல் ஆசிரியை எனும் முக்கியப் பொறுப்பினைக் கொண்டுள்ளாள். இருந்தபோதிலும், பஹாய் போதனைகள் இவ்வளவுதாம் என்றிருந்தால், நமது நிலையும் பாரம்பரியமாக வந்துள்ள நிலையைப் போன்றே இருந்திருக்கும். அதாவது, பெண் வீட்டுப்பொறுப்பை கவனிப்பவளாகவும், ஆண் வெளியே வருவாய் ஈட்டுபவனாகவும் இருப்பது. ஆனால் இது மட்டும் அல்ல. பொறுப்புமாற்றம் குறித்து பஹாய் எழுத்துக்களில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது, பெண்ணின் இடம் வீட்டுப்பொறுப்பை மட்டும் உட்படுத்தியது அல்ல. உலக நீதி மன்றத்திலிருந்து வந்துள்ளதில் ஒரு பகுதியைப் படிக்க விரும்புகிறேன். உலக நீதி மன்றம் கூறுவது: பஹாய் குடும்பம் குறித்த உட்கருத்து, ஆன் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டிடும் அடிப்படைப் பொறுப்பை வகிப்பவனாகவும், பெண் என்பவள் குழந்தைகளுக்கான முக்கிய மற்றும் அஸ்திவாரமான ஆசிரியை எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்காக இக்கடமைகள் மாற்ற முடியாத வகையில் நிலைப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளா என பொருள்படாது. அல்லது, பெண்களின் இடம் வீடுதான் எனவும் பொருள்படாது. மாறாக, அடிப்படைக் கடமைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தந்தைகள் சிறார்களின் கல்வியில் முக்கியப் பங்காற்றுவார்கள் எனவும், தாய்மார்கள் குடும்பத்திற்கான வருவாய் ஈட்டுபவர்களாகவும்கூட இருப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக, நமது போதனைகள் கடமைகள் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட அளவுக்கு அனுமதிக்கின்றது. இது சம்பிரதாயமான குடும்பங்களில் உள்ளதைவிட அதிகமே ஆகும்.

 

நமது சமயம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான பாடமுறைகளையே வலியுறுத்துகின்றது. சமுதாயத்தில் பெண்களுக்கான பொறுப்புக்கள் இதிலிருந்தே அறியப்படுகின்றன. சம்பிரதாயமாகவே, பெரும்பாலான மேற்கத்திய சமூகங்களில், ஆண்கள் பௌதீக அறிவியலையும், பெண்கள் குடும்பநூல் அல்லது குடும்பஅறிவியலைக் கற்கின்றனர். ஒரு பொதுவான பாடமுறையினால், பெண்களும் பௌதீக அறிவியல்களைக் கற்பார்கள் என்றும் ஆண்கள் குடும்பக்கலைகளையும் கற்பார்கள் எனவும், அதனால் வருங்கால உலகம் ஒன்றிற்கு பெரிய அளவில் தயார் நிலையும் இருக்கும் என்பது பொருள்.

 

புனித வாசகங்கள், பெண்கள் ஆற்றக்கூடிய குறிப்பிடத்தக்க சில விசேஷ கடமைகளை அடையாளம் காட்டுகின்றன. உதாரனமாக, அப்துல் பஹா, சட்டத்துறை மற்றும் அரசியல்களில் பெண்கள் மன உறுதியுடனும் ஆற்றலோடும் நுழைவர் எனவும், போர்கள் ஓயவேண்டியது முக்கியம் எனவும் கூறுகின்றார். வேறொரு இடத்தில், பெண்கள், தொழில்துறை மற்றும் விவசாய அறிவியல்கள் குறித்து தங்கள் சக்திகளையும் திறன்களையும் செலுத்தவேண்டும், அவ்வாறு செய்து, மிகவும் இன்றியமையாதவைகளுக்காக மனுக்குலத்திற்கு உதவிடவும் வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஆக, இவ்வாசகப்பகுதிகளும் மற்றவைகளும், குடும்பத்திற்கு வெளியே பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்த நமது பரந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது, விவசாயம், சட்டத்துறை, அரசியல், மற்றும் பிற விஷயங்கள். உலக நிருபத்தில் பஹாவுல்லா பெண்களும் அதே சமயம் ஆண்களும் வருவாய் ஈட்டுவர் என தாமே அறிவித்துள்ளார் என உலக நீதி மன்றம் அறிவிக்கின்றது.

 

வருவாய் ஈட்டுபவர்கள் எனும் தங்கள் பங்கு குறித்த ஏற்புடைமை குறித்த பஹாய் போதனைகளை அடையாளம் காணும் வேறு பல வாசகப்பகுதிகளும் உள்ளன. அவை, தாய்மை குறித்த கடமைகளோடு சேர்த்து இதையும் எப்படி சிறப்பாக நிறைவேற்றப்போகிறார்கள் என தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்கின்றன.

 

ஒரு பெண் தாய்மைப் பேற்றை அடையும்போது, ஒருபுறம் தாய் எனும் முறையில் தனது தலையாய கடமைகளை எவ்வாறு சிறப்பாக நிறைவேற்றப்போகிறாள் எனவும், மறுபுறம், தான் அங்கம் வகித்துள்ள சமூகத்தின் நடவடிக்கைளின் பிற அம்சங்களில் முடிந்த அளவு எவ்வாறு பங்கேற்கப் போகிறாள் எனவும் அவள் தீர்மானிக்க வேண்டும். ஆண் பெண் சமத்துவம் குறித்த பஹாய் போதனைகள் சிலவற்றை இதுவரை கண்டோம்.

 

வேறு இரண்டு போதனைகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சமூகத்தின் தினசரி நடவடிக்கைளில் பிரச்சனைகள் இல்லாமல் ஒரு கலவையை பாலுறவு நெறிமுறை குறித்த நமது போதனைகள் வழங்குகின்றன. இது, வீட்டில், சமூக கலந்துறவாடல்களில், வானிபங்களில், தொழில்களில், பள்ளிகளில், மற்றும் அவை போன்றவைகளில் வழங்குகின்றன. உதாரணமாக, சமுதாயத்தோடு தொடர்புகொண்டுள்ள பல பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் பெரும் பிரச்சினைகளாகியுள்ளன. ஆக, பாலியல் சம்பந்தமான நமது போதனைகள் பரவலான சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் செயல்பட ஆண் பெண் இருபாலரையும் இவற்றிலிருந்து விடுவிக்கின்றது. நாம் இங்கு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில், ஒப்பந்தம் பெண்களுக்கு பலவழிகளில் பாதுகாப்பு அளிக்கின்றது. உலக நீதி மன்றத்தின் 'தவறிழைக்காமையின்' வழி, சமயம் கெடுக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. உலக நீதி மன்றத்தின் சட்டமியற்றும் செயல்பாடு நமது போதனைகளில் உள்ள சமத்துவ உணர்வை அதிகாரபூர்வத்துடன் வெளிப்படுத்தும். ஒப்பந்தத்தின் மற்றுமொரு பரிமாணம், சமயகுருமார்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்கின்றது. சமயகுருக்களின் ஸ்தாபனம் பெண்கள் உரிமைக்கு எந்த அளவுக்கு பாதகமாக இருந்துள்ளது என்பதை வரலாற்று பூர்வமாக நாம் கண்டுள்ளோம். அதற்கும் மேலாக, சமயகுருக்கள் போல் நடந்துகொள்வதிலிருந்து நமது நிர்வாக ஸ்தாபனங்களை ஒப்பந்தம் தடுக்கின்றது. அதாவது, அவர்கள் சமயகுருக்கள் போல் நடந்து, சமயகோட்பாட்டு ரீதியான சொந்த அறிக்கைகளை வெளியிடுவது தவிர்க்கப்படுகின்றது. இத்தகைய அறிக்கைகள் தவறிழைக்காமையின் பாதுகாப்பின்றி, பெண்களுக்கு எதிரான அபிப்ராயங்களை வெளியிடவும் கூடும். ஆக, ஒப்பந்தம் பலவழிகளில் பெண்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பளிக்கின்றது. இப்போது, பெண்களும் அமைதியும் குறித்த நேரடியான கேள்விக்கு வருவோம். பெண்கள் விடுதலை பெறுவது, வாக்குறிமை பெறுவது, மற்றும் சமுதாயத்தில் தங்கள் பங்கை ஆற்றுவது, ஆகியற்றுக்கும் அமைதி குறித்த அவர்களின் அக்கறை ஆகியவற்றுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளதென்பதை 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்: அதாவது, 1873ல் ஜூன் மாதம் 2ம் தேதி நடந்த பெண்களுக்கான அமைதி விழா. இது நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் நகரிங்களில் இது நடத்தப்பட்டது. பிஃரான்கோ-பிரஸ்ஷியன் போரினால் விளைந்த மாபெரும் துன்பங்ளைக் கண்டு மனம் திகைப்படைந்த ஒரு பெண்கள் குழுவின் வழி இது நடைபெற்றது. அந்தப் பெண்கள் குழு, அமைதியை தோற்றுவிக்கும் நோக்கம் கொண்ட பெண்களின் அமைதி விழாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கிய அமைப்பு இது. 1873ல் நடைபெற்ற இந்த விழா, பின்வருவனவற்றைக் கோரியது:

 

 

- பொது ஆயுதக்களைவின் வாயிலாக போர்களை ஒழிப்பது,

 

- உலக நாடுகளின் மீது கண்டிப்பான அதிகாரம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை தோற்றுவிப்பது,

 

- அமைதிக்கு கேடு விளைவிப்பதால் மது விற்பனைக்குத் தடை விதிப்பது,

 

- பயங்கரமான ஆயுதங்களுக்கான விற்பனை மற்றும் அவற்றை கைவசம் வைத்திருப்பதற்குத் தடை விதிப்பது,

 

- பாலியல், நிறம் மற்றும் இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படும் சமத்துவமின்மையை போக்குவது, மற்றும்

 

- போர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும், தகறாருகளைத் தீர்த்து வைப்பதற்காக நடுநிலையாளர்களாக செயல்படுவதற்காகவும், பெண்களின் பங்கை அடையாளம் காண்பது.

 

 

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்திற்கு முன், அனைத்துலக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, நாடுகளின் பொது ஆயுதக்களைவும், அனைத்துலக பிரச்சினைகளைக் களைவதற்காக கட்டாயமான விசாரனைக்கூட்டங்களும் ஏற்படுத்தப்படவேண்டுமென வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்த பெண்கள் அமைப்புக்கள் ஓர் உலக அரசாங்கம் வேண்டுமென கோரிக்கைகள் விடுத்தன. இந்த அமைதிக்கான பெண்களின் விழா, இறுதியில் பிரிவுகளுக்கு உட்பட்டுப் போயிற்று. காரணம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்க பூர்வகுடியினர் பற்றிய அமெரிக்க இராணுவக் கொள்கை சம்பந்தமாக இந்தப் பிரிவினை உண்டாயின்று. ஆனாலும், இந்தப் பிரிவினை, இன்றுவரை நிலைத்திருக்கும் வேறு பல அமைப்புக்களுக்கு இட்டுச் சென்றது. உதாரனமாக, அமைதிக்கான பெண்களின் கட்சி, அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான பெண்கள் அனைத்துலக சங்கம், மற்றும் 1921ன் பெண்களின் அமைதிக் கூட்டம், ஆகியவை. அமைக்கும் சுதந்திரத்துக்குமான பெண்கள் சங்கம் பாரீசில் 1919ல் நடைபெற்ற அமைதி மாநாட்டிற்கு சில கருத்துரைகளை வழங்கியது. இது முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடந்தது. நிறந்தர அமைதி நிலவுவதற்காக அச்சங்கம் பல பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் அந்த 1919ம் ஆண்டின் அமைதி மாநாட்டினால் நிராகரிக்கப்பட்டன.

 

அந்த மாநாட்டில் கூடியிருந்தோரில் ...................... எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். 1946ல், 26 வருடங்களுக்குப் பிறகு, ஸ்கேண்டினேவியாவில் உள்ள நோபல் நிறுவனத்தின் ஓர் ஆங்கத்தினராகவும் அவர் இருந்தார். இந்த நிறுவனம், அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான அனைதுதுலக பெண்களின் சங்கத்திற்கு எமிலி பல்க் ஆற்றிய சேவைக்காக நோபல் அமைதித் பரிசை அவருக்கு அளித்த நிறுவனமாகும். அந்த வேளையில் அவர் பின்வரும் வார்த்தைகளை உரைத்தார். அவர்: "நான் நிறைய கூற விரும்புகிறேன். 1919ல் அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான அனைதுதுலக பெண்களின் சங்கம் மாநாட்டுக்கு அளித்த பரிந்துரைகளை மாநாடு ஏற்றுக்கொண்டிருந்தால் அது மிகவும் விவேகமாக இருந்திருக்கும். ஆனால், வெகு சில ஆண்களே பெண்கள் அளித்த அந்த பரிந்துரைகளைச் செவிமடுத்தனர். அங்கு நிலவிய சூழ்நிலை மிகவும் கசப்பு நிறைந்தும் பழியுணர்ச்சி மிகுந்தும் இருந்தது. அதற்கும் மேலாக, பரிந்துரைகள் பெண்களால் செய்யப்பட்டிருந்தன. நாம் வாழும் ஆண்தலைமைத்துவ உலகில், பெண்களிடமிருந்து வரும் கருத்துக்கள் பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. அவர் பின்வரும் வார்த்தைகளோடு உரையை முடித்தார்: "தங்களுடைய செறுக்கு மிகுந்த புன்சிரிப்பை விட்டுவிடுதல் ஆண்களுககு விவேகமாகும்," ஆகவே, கூற விரும்புவது என்னவென்றால், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளிலில் குறிப்பிடத்தக்க அளவில் அமைதி அடையப்படுவதில் பெண்கள் அனுக்கமான சம்பந்தம் கொண்டுள்ளனர் என்பதே ஆகும்.

 

அமைதி குறித்த பஹாய் அனுகுமுறை குறித்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் அமைதி அடையப்படுதலுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்தும் நாம் என்ன கூறக்கூடும். அது மூன்று பெரும்படி கோட்பாடுகளை அஸ்திவாரமாகக் கொண்டுள்ளது என்பது என் எண்ணம்.

 

முதலாவது கோட்பாடாக இருப்பது பூரணவளர்ச்சி குறித்த கோட்பாடாகும். பெரும்பாலான பஹாய்கள் தங்களை இந்தக் கோட்பாட்டோடு பழக்கப்படுத்திக் கொள்டுள்ளனர். பஹாய் நிர்வாக முறையின் வழி நாம் அமைக்க விரும்பும் சமுதாயமானது, பூரனவளர்ச்சியோடு கூடிய சமுதாயமாகும். அது ஜீவனுள்ள ஒன்று. எல்லா பகுதிகளுடனும் அது தொடர்புடையது. ஒரு பகுதியின் நல்வாழ்வு மற்ற எல்லா பகுதிகளையும் பாதிக்கக்கூடியது. இதுவே ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வியோடு மிகவும் அனுக்கமாக தொடர்புகொண்டுள்ளது. ஏனெனில், அமைதி ஐக்கியத்தைக் கோருகிறது என நமது புனித வாசகங்கள் கூறுகின்றன. அமைதி வேண்டுமென்றால் நமக்குள் ஐக்கியம் வேண்டும். இந்த ஐக்கியம் மனுக்குல ஒற்றுமையை அடிக்கோளிடுகிறது. மனுக்குல ஒற்றுமை இல்லையெனில் நமக்குள் அடிப்படை ஒற்றுமை கிடையாது. அமைதியும் கிடையாது. மனுக்குல ஒற்றுமைக்கு ஆண் பெண் சமத்துவம் அடிப்படையாகும். அமைதி, இனங்களுக்கிடையில் உள்ள உறவு குறித்ததோ, சமுதாயப்பகுதிகள் சிலவற்றுக்கிடையில் உள்ள உறவு குறித்ததோ மட்டும் அல்ல. அது ஆண் பெண் சமத்துவம் குறித்த விஷயமும் கூட. ஆக அந்த எண்ணத்தில், ஆண் பெண் சமத்துவம் மனித சமுதாயத்தின் பூரணவளர்ச்சியின் ஓர் அடிப்படை அம்சமே ஆகும். இந்தப் பூரணவளர்ச்சி கொண்ட பகுதியோடு நமது சமயம் அடையாளப்படுத்தும் ஆன்மீக ஆற்றல்களை அது பெற்றிருக்கும்.

 

அமைதி குறித்த தனது அறிக்கையில், சமத்துவமில்லாமை சமுதாயத்தையே பாதிக்கக்கூடிய அபாயகரமான மனப்பாங்குகளை ஆண்களுள் உருவாக்குகிறது என உலக நீதி மன்றம் கூறியுள்ளது. இதே கோட்பாட்டை அப்துல் பஹா பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரனமாக, தாங்கள் சாதிக்கக்கூடிய உச்சங்களை பெண்கள் அடைவது தடுக்கப்படும் வரை, ஆண்களும் தங்களுக்கெ ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பை அடையத் தவறுவர், என அப்துல் பஹா கூறுகின்றார். ஆண் பெண் இருபாலரையும் நோக்கி அவர் கூறுவது என்னவென்றால்: ஒன்று பழுதுபட்டு இருக்குமானால், மற்றதும் நிச்சயமாக குறையோடு இருந்து, பூரணத்துவம் அடையப்படாமலேயே போகும். ஒன்று குறையோடு இருக்குமானால் அது மற்றதையும் பாதிக்கம். இவற்றிலிருந்து நான் அறிவது யாதெனில், பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லையெனில், ஆண்களும் தங்களது முழு மேம்பாட்டை அடைவதிலிருந்த தடுக்கப்படுகின்றனர். அல்லது, அப்துல் பஹா கூறுவது போல, ஆண்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் சிறப்பை அடைவதிலிருந்து தடுக்கப்படுவார்கள். ஆகவே, உண்மையான ஒரு விதத்தில் ஆண்கள் பெண்களிடம் பிணைப்பட்டவர்களே. நமது சமுதாயத்தின் ஆண்கள் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க தவறினால், அதே ஆண்கள் தங்கள் முழுமையான சிறப்பை நிறைவு செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றனர். அல்லது, அப்துல் பஹா கூறுவது போல தங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் சிறப்பை அவர்கள் அடையாமற் போகக்கூடும்.

 

அப்துல் பஹா பல இடங்களில், அமைதி அடையப்படுவதில் தாய்மார்கள் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கினைப் பற்றி குறிப்பிடுகின்றார். தாய்மார்கள் தன்னிச்சையாக தங்கள் பிள்ளைகளை போருக்கு அனுப்பப்போவதில்லை, என கூறுகிறார். 20 வருடங்கள் போல் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, போருக்கு அனுப்பி, நிலத் தகறாறோ அல்லது அது போன்ற வேறு ஏதாவது தகறாற்றினாலோ தயவு தாட்சன்யமின்றி அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தாய்மார்கள் அனுமதிக்கப்போவதில்லை. பிள்ளைகளை சன்டைக்கு அனுப்பமாட்டார்கள் எனும் வார்த்தைகளுக்கும் அப்பால் இங்கு வேறு ஏதோ ஆழமான அர்த்தங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். அதாவது, தாய்மை என்பது பிறரை பராமரிப்பதிலும் கவனித்துக்கொள்வதிலும் தன்னலமற்ற செயல்களை உள்ளடக்கியுள்ளது எனவும், தனக்குள் வளரும் அந்த கருவுக்காக தன்னையே அழித்துக்கொள்வதை அது உள்ளடக்கியுள்ளது எனவும், இந்த புதிய படைப்பிற்கு தனது உடலில் இருந்து ஊரும் பாலை, தனது உடலிலிருந்தே உருவாக்கப்படும் பாலை ஊட்டுவதை உள்ளடக்கியுள்ளது எனவும், நான கருதுகிறேன். ஏனெனில், தாய்மை எனும் வளர்செயற்பாடு, தன்னலமின்மை உணர்வை வெளிப்படுத்துகிறது, ஆதிக்கம் மற்றும் கட்டுப்படுத்துதல் எனும் உணர்வின்றி பராமரிப்பு மற்றும் பிறருக்கு உதவும் உணர்வை வெளிப்படுத்துகின்றது. அமைதியை அடைந்திட இந்த உலகிற்குத் தேவைப்படுவது பராமரிப்பு குறித்த இந்த உணர்வு அதிகமாகவும், ஆதிக்கம் குறித்த உணர்வு குறைவாகவுமே ஆகும். அமைதி அடையப்படுவதற்கும் அது பராமரிக்கப்படுவதற்கும் பெண்கள் ஆற்றங்கூடிய முக்கிய பங்கிற்கு இதுவும் ஓர் அம்சமாக இருக்கும்.

 

என் உரையை நான் இப்போது ஒரு முடிவிற்குக் கொண்டுவரவிருக்கின்றேன். அதற்கு முன்பாக, ஆண் பென் சமத்துவம் குறித்த பஹாய் கோட்பாடுகளை அமுல் செய்வதில் நமக்கு வழிகாட்டுவதற்கு பஹாய் எழுத்துக்களில் நான் கண்ட ஒரு சில அம்சங்களை நான் இங்கு சுருக்கமாக குறிப்பிடவிரும்புகிறேன். நாம் என்ன வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும், நாம் எதில் கவனமாக இருக்கவேண்டும், நாம் எதைத் தவிர்க்கவேண்டும், ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும். இது குறித்து ஐந்து கோட்பாடுகள் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

 

முதலாவதாக, நமது புனித வாசகங்கள் பலத்தை பிரயோகிப்பதையோ கண்டன ஊர்வலங்கள் நடத்துவதையோ அனுமதிக்கவில்லை. அப்துல் பஹா கூறுவது: இப்போது இங்கிலாந்தில் பலத்தை வெளிப்படுத்தும் கண்டனக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அவை, பெண்மை மற்றும் சமத்துவத்தின் ரீதியில் உகந்தவையுமல்ல, நல்விளைவுகளை உருவாக்கக்கூடியவையுமல்ல. நமது அனுகுமுறை பலத்தை பிரயோகிப்பதை உட்படுத்தியதல்ல.

 

என் எண்ணத்தில், மாற்றங்கள் என்பவை பரிணாம ரீதியானவை என்பது இரண்டாவது கோட்பாடாகும். எதையும் உடனடியாக செய்யவேண்டும், ஒரே நாளில் முடிக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். ஆனால் மனிதம் அவ்வாறு செயற்படக்கூடியதல்ல. அது படிமுறை வளர்ச்சியை உட்படுத்தியது. தங்களின் சார்பாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் உலக நீதி மன்றம்: சமயத்தில் உள்ள மற்ற போதனைகளைப் போல், ஆண் பெண் சமத்துவம் குறித்த கோட்பாடு, பஹாய் வாழ்க்கையின் மற்ற அம்சங்களோடு சேர்த்து பின்தொடரப்படுமாயின், அது நண்பர்களின் மத்தியில் செயல்விளைவுடனும், அனைத்துலக ரீதியிலும் ஸ்தாபிக்கப்படும். மாற்றம் என்பது படிமுறை வளர்செயற்பாடாகும். அது ஒருவர் தன்னோடும் பிறரோடும் பொறுமையும், அன்பான வழியில் கல்விபுகட்டுவதும் மற்றும் நம்பிக்கையாளர்கள் தங்கள் சமய அறிவை பெறுக்கிக்கொள்ளும் காலத்தின் ஓட்டமும், காலம் காலமாக கடைபிடித்து வரும் பாரம்பரிய மனப்பாங்குகளைக் கலைந்தும், சமயத்தின் ஒன்றுபடுத்தும் போதனைகளோடு படிப்படியாக தங்கள் வாழ்க்கைகளை இணக்கமாக்கியும் கொள்வதை கோருகின்றது. பொறுமை, படிமுறைவளர்ச்சி, படிபடிப்படியான மேம்பாடு, அன்போடு கல்விபுகட்டல், காலப்போக்கு, தன்னோடும் பிறரோடும் பொறுமையை கடைப்பிடித்தல் மற்றும் பிற.

 

மூன்றாவது கோட்பாடு, ஆண்களுக்கும் பெண்களுக்கு இடையே சச்சரவுகளைத் தவிர்ப்பது. ஈரானில், பஹாய் பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்கள் இயக்கத்தைப் பற்றி அப்துல் பஹா குறிப்பிடுகிறார். அந்த இயக்கம், அறிவு வளர்ச்சி குறித்து உருவாக்கப்பட்டதாகும். அதற்கு அறிவுரைகள் எழுதும் போது, வித்தியாசங்கள் நாட்பட நாட்பட, முற்றிலும் துடைத்தொழிக்கப்படுமாறு செய்யப்படவேண்டும் என எழுதினார். மாறாக, ஆன்களுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களை, இறைவன் பெயரால் , உருவாக்காமல் இருக்குமாக. சுறுக்கமாகச் சொல்லப்போனால், அவர் முற்றிலும் ஆன்மீகமான விஷயங்களிலேயே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, ஆண்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. இந்த விஷயம் குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமுதாய ரீதியில் ஏற்படும், வீனான மற்றும் பலனற்ற பகைமையை நாம் கண்டுள்ளோம். நாம் இவற்றை தவிர்க்க வேண்டும் என நமது போதனைகள் வலியுறுத்துகின்றன. பெண்களை ஊக்குவிக்கும் ஒரு மாபெரும் கடமை ஆண்களுக்கு இருப்பதாக நமது புனித வாசகங்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஆண்கள் கொண்டுள்ள ஆதிக்க உணர்வையும் அவர்கள் போக்கிக்கொள்ள வேண்டும். அப்துல் பஹா கூறுவது: பெண்கள் சமத்துவத்தை அடைதலானது படைப்பு ரீதியில் அறவே இயலாததெனும் வகையில் ஆண்களின் ஆதிக்கம் செலுத்தும் போக்கானது அவர்களுக்குத் தொடர்ந்து வாட்டம் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்துவரும். மேம்பாட்டை நோக்கிய பெண்ணின் இலட்சியம் இதனால் தடைபட்டு, அவள் சிறுக சிறுக நம்பிக்கை இழந்துவிடுவாள். இதற்கு மாறாக, நாம் அவளுடைய ஆற்றல் சமமானதே என அறிவிக்க வேண்டும். பார்க்கப்போனால் ஆண்களுடையதை விட பெண்களின் ஆற்றல் அதிகமானதே. இச்செய்கை பெண்களின் மனதில் நம்பிக்கையையும் இலட்சியமனப்பான்மையையும் தோற்றுவிக்கும். ஆக, ஆண்களுக்குப் பெரும் கடமை உள்ளது. பெண்களுக்கு அவர்கள், மேம்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த எல்லா விஷயங்களிலும் நேர்மையானதும், மாசற்றதும், நல்விளைவுகள் மிக்கதுமான உற்சாகத்தை அளிக்கும் கடமையைக் கொண்டுள்ளனர். ஆண்கள், அப்துல் பஹா கூறும், தாங்கள் (பெண்களைவிட)உயர்ந்தவர்களெனும் அந்த மனப்பாங்கை அழித்துவிட வேண்டும். கடைசிக் கோட்பாடு, பெண்கள் சுயமேம்பாடு மற்றும் சாதனைகள் குறித்த சொந்த முயற்சிகளில் கடும் ஈடுபாடு காட்டுவதன் முக்கியத்துவம். அப்துல் பஹா கூறுகிறார்: எல்லா வழிகளிலும், ஆணுக்குச் சமமாக பெண் அதிக பூரணத்துவம் எய்திட முயலவேண்டும். அவள், தான் பின்தங்கியுள்ளவற்றில் எல்லாம் மேம்பாடு அடையவேண்டும். இதன்வழி, ஆண்கள், ஆற்றல் மற்றும் சாதனைகளில் பெண்கள் தங்களுக்கு ஈடானவர்களே என்பதை ஆமோதித்திட வலியுறுத்தப்படுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம் குறித்த கோட்பாட்டை அமுல்படுத்துவதற்கான செயல்விளைவுகள் மிக்க பஹாய் அனுகுமுறையை இந்த ஐந்து கோட்பாடுகளும் அடிக்கோளிடுகின்றன என்பது என் எண்ணம்.